shadow

சொந்த மண்ணில் பாகிஸ்தானிடம் தொடரை இழந்தது இலங்கை அணி

cricketஇலங்கையில் சுற்றுப்பயணம்செய்து வரும் பாகிஸ்தான் அணி, மொத்தம் ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டது. இதில் நான்கு போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில் மூன்று போட்டிகளில் வெற்றி தொடரை வென்றுள்ளது. சொந்த மண்ணில் இலங்கை பரிதாபமாக தொடரை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கொழும்பு நகரில் இரு அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. திரமன்னே 90 ரன்களும், தில்ஷான் 50 ரன்களும் எடுத்தார்.

257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 257 ரன்கள் எடுத்து வெற்றி பெர்றாது. அஹ்மது சேஜாத் 95 ரன்களும், முகம்மது ஹபீஸ் 70 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 26ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

Leave a Reply