shadow

எழுந்து நின்று பாட்டு பாடாத கர்ப்பிணி பெண் சுட்டு கொலை

பாகிஸ்தானில் அற்ப காரணங்களுக்காக கொலை செய்யப்படும் சம்பவங்கள் உலகிலேயே அதிகம் நடைபெற்று வரும் நிலையில் நேற்று கச்சேரி ஒன்றில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பெண் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தால் உள்ள லர்கானா பகுதியில் கச்சேரி ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. அதில் 24 வயது பாடகி சமீனா சமோன் என்பவர் பாட்டு பாடிக் கொண்டிருந்தார். அவர் கர்ப்பிணியாக இருந்ததால் உட்கார்ந்தபடியே பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்த தரிக் அகமது ஜடோய் என்பவர், சமோனை எழுந்து நின்று பாடுமாறு கூறியுள்ளார். தான் கர்ப்பிணி என்பதால், நின்று கொண்டு பாட முடியாது என அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தரிக் அகமது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டார். இதில் குண்டுகள் துளைத்து சமோன் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சமோன் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து சமோனின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தரிக் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கச்சேரியில் எழுந்து நின்று பாடாத கர்ப்பிணி பாடகியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பிணி, பாடகி, சுட்டுக்கொலை, பாகிஸ்தான்

Leave a Reply