shadow

 

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் அரையிறுதிக்கு இந்தியா செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஏற்கனவே இலங்கை அணியிடம் தோல்வியுற்ற இந்தியா, நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியை கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 56 ரன்களும், அம்பத்தி ராயுடு 58 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோஹ்லி 5ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவரில், 9 விக்கெட் இழப்பில் 249 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றது. அஸ்வின் வீசிய கடைசி ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் அணியின் சாகித் அப்ரிடி பாகிஸ்தான் வெற்றியை உறுதி செய்தார்.

Leave a Reply