இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை பாகிஸ்தான் அணி 3-2 என்ற கணக்கில் வென்றுவிட்ட நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர்கள் போட்டி நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டான்ஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் அஹ்மது செஜாத், ஷோயிப் மாலிக் மற்றும் உமர் அக்மால் ஆகிய மூவரும் தலா 46 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி பாகிஸ்தான் பவுலர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னணி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது 20 ஓவர்கள் போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெறும்.
Leave a Reply
You must be logged in to post a comment.