shadow

பாகிஸ்தானுக்கு குடியேற வாருங்கள். ஷாருக்கானுக்கு அழைப்பு விடுத்த மும்பை வெடிகுண்டு குற்றவாளி
shahrukkhan
மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா என்ர தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகமத் சயித், பாலிவுட் நடிகர் ஷாருக்கனை பாகிஸ்தானில் குடியேற வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதசகிப்புத்தன்மை குறித்து ஷாருக்கான் தனது பிறந்த நாள் விழாவில் பேசினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சாத்வி பிராச்சி, இஸ்லாமியர்கள் இந்தியாவில்தான் வசித்தாலும் அவர்களுடைய ஆத்மா பாகிஸ்தானுக்காக வாழ்கிறது என்றும், ஷாருக்கானை பாகிஸ்தானின் ஏஜென்ட்  என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஹபீஸ் முகமத் சயித்,தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “ஷாருக்கான் உள்பட எந்த முஸ்லிமும் இந்தியாவில் வாழ்வதில் கடினமாக இருப்பதாக உணர்ந்தால், இனப்பாகுபாடு இருப்பதாக கருதினால், இஸ்லாமின் பேரில் பாகிஸ்தானில்  குடியேற அழைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ” இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இந்தியா மதசார்பின்மை கொண்ட  நாடு என்ற அடையாளத்தை இழந்து இந்து தேசமாக மாறி வருகிறது” என்றும் ஹபீஸ் சயித் அதில் தெரிவித்துள்ளார்.

ஹபீஸ் முகமத் சயீத்தின் அழைப்பிற்கு ஷாருக்கான் என்ன பதில் சொல்ல போகிறார் என்பதை அறிய பொதுமக்களும் ஊடகங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

English Summary: Pakistan terrorist invite Shahurkkhan to come Pakistan

Leave a Reply