பாகிஸ்தான் ராணுவத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளருக்கு திடீர் சலுகை
இந்தியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் ராணுவம் மற்றும் உளவுத்துறை உதவியாக இருப்பது குறித்த உண்மைகளை கட்டுரை மூலம் வெளியிட்ட பிரபல நாளிதழின் துணையாசிரியர் சிரில் அல்மெய்டா அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் நடக்கும் உண்மை நிலவரத்தை தோலுரித்து காட்டிய நேர்மையான பத்திரிகையாளருக்கு பாகிஸ்தான் அரசு விதித்துள்ள இந்த திடீர் தடை சகப்பத்திரிகையாளர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில் திடீரென அந்த தடையை தற்போது பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிரில் அல்மெய்டா, நான் பாகிஸ்தான் மண்ணில் பிறந்து, இந்த நாட்டில் வாழும் குடிமகன். எந்த வெளிநாட்டுக்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. இதனால் இந்த தடை நீக்கம் எனக்கு எவ்விதத்திலும் பயன்படாது என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.