shadow

shadow

பாகிஸ்தானின் முக்கிய விமான நிலையமான கராச்சி விமான நிலையத்தின் மீது நேற்று அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் உள்பட 24 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்குள், நேற்று மாலை  விமான நிலைய செக்யூரிட்டி அதிகாரிகள் போல் உடையணிந்து அதிரடியாக நுழைந்த நுழைந்த தீவிரவாதிகள், துப்பாக்கி மற்றும் கையெறி வெடிகுண்டுகளைக் கொண்டு சரமாரியான தாக்குதல் நடத்தினர். இதனால் ஜின்னா விமான நிலையத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலை 8 தீவிரவாதிகள் இணைந்து நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் காரணமாக  விமான சேவை நிறுத்தப்பட்டு, அனைத்து வழிகளும் மூடப்பட்டன.

இதன் விளைவாக, விமான நிலைய பணியாளர்கள் அனைவரும்வெளியேற்றப்பட்டு, தீவிரவாதிகளை பிடிக்க அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தனர். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply