கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூக்ஸ் பந்து தாக்கிய மரணம் அடைந்த அதிர்ச்சி தற்போதுதான் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் பந்து தாக்கி மரணம் அடைந்துள்ளதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி ஒன்று பாகிஸ்தானின் கராச்சி அருகேயுள்ள ஓரங்கி என்ற நகரில் இன்று நடைபெற்றது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, 18 வயது இளம் வீரர் ஜீஷன் முகமதுவின் மார்பகப் பகுதியை மிக வேகமாக தாக்கியதால் மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஜீஷன் முகமதுவின் மறைவு பாகிஸ்தான் கிளப் அணி வீரர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவருக்கு பந்து வீசியவர் கடும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் அவருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.