shadow

பிரதமர் மோடிக்கு அறிவுரை கூறி கடிதம் எழுதிய பாகிஸ்தான் சிறுமி


சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் வாழ்த்து மற்றும் அறிவுரை கூறி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“இதயங்களை வெல்வது மிகச்சிறந்த பணி என என் அப்பா ஒரு முறை கூறியிருக்கிறார். நீங்கள்(மோடி) இந்திய மக்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள். அதனால்தான் உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள பலரின் இதயத்தை நீங்கள் வெல்ல வேண்டும் என்றால், நட்பு மற்றும் அமைதிக்கான செயல்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கிடையேயும் நல்ல நட்புறவு தேவை. இரு நாடுகளையும் இணைக்கும் அமைதிப் பாலத்தை உருவாக்குவோம். துப்பாக்கி குண்டுகள் வாங்குவதை விடுத்து, புத்தகங்களை வாங்குவோம். துப்பாக்கிகள் வாங்குவதை விடுத்து, ஏழை மக்களுக்கு தேவையான மருந்துகளை வாங்குவோம்.” என தனது இரண்டு பக்க கடிதத்தில் அகீதத் நவீத் தெரிவித்துள்ளார்.

லாகூரை சேர்ந்த இந்த சிறுமி ஏற்கனவே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply