shadow

காவலில் இருக்கும் மகனுக்கு ஆறுதல் கூறிய ப.சிதம்பரம்

சிபிஐ காவலில் இருக்கும் மகன் கார்த்திக் சிதம்பரம் அவர்களுக்கு அவரது தந்தை ப.சிதம்பரம் தைரியமாக இருக்க அறிவுரை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2007-2008ஆம் ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் மூலம், ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், இந்த முறைகேட்டில் கார்த்திக் சிதம்பரம் உடந்தை என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்திற்கு ஐ.என்.எக்ஸ். மீடியா சார்பில் ரூ. 90 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ தரப்பு கூறியதை அடுத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, டெல்லி கொண்டு செல்லப்பட்டு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்திக்கை ஒரு நாள் சிபிஐ காவலுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது

இந்த நிலையில் கார்த்திக்கை நேரில் சந்தித்த ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தைரியமாக இருக்க வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply