shadow

ரூ.400 கோடிக்காக ரூ.17.5 லட்சம் கோடியை வீணாக்குவதா? ப.சிதம்பரம் கேள்வி

pcரூ.400 கோடி கருப்புப்பணத்தை ஒழிக்க ரூ.17.50 கோடியை மத்திய அரசு வீணாக்கியுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசின் ரூ.500,. ரூ1000 செல்லாது என்ற அறிவிப்பு ஏன் என்பது தனக்கு இன்னும் புரியவில்லை என்றும் இந்த அறிவிப்பால் ஏழை எளிய சாமான்ய மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என வரவேற்கப்பட்டாலும் ரூ.400 கோடி கறுப்புபணத்தை அழிக்க ரூ.17.50 லட்சம் கோடியை வீணாக்குவது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் சிதம்பரத்தின் கேள்விக்கு பலர் பொதுமக்கள் கிண்டல் அடித்துள்ளனர். சிதம்பரம் குடும்பத்தினர்களிடம் மட்டும் இருக்கும் கருப்புப்பணத்தைத்தான் ரூ.400 கோடி என்று அவர் குறிப்பிடுகிறாரா? என்று ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் நிதியமைச்சராக இருந்த ஒருவருக்கு நாட்டில் கருப்புப்பணம் எவ்வளவு இருக்கும் என்பது தெரியாதா? ஏழை எளியவர்களுக்காக சிதம்பரம் நீலிக்கண்ணீர் வடிப்பதாக இன்னொருவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply