ஓவியா எதிர்பார்க்கும் ஆண்மகனின் குணங்கள் இவைதான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஓவியா மட்டுமே இயல்பாகவும் உண்மையாகவும் இருப்பதால் அவர் இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னியாகவே மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு வார்த்தை மற்றும் வசனங்கள் டுவிட்டரில் டிரெண்டிங்கில் வருகிறது.
இந்த நிலையில் தான் எதிர்பார்க்கும் ஆண்மகனின் குணங்கள் என நேற்றைய நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார். ஒரு நல்ல ஆண்மகன் என்பவர் வீரமாக, தைரியமாக இருக்க வேண்டும் என்றும், கண்ணெதிரே ஒரு அநியாயம் நடந்தால் தட்டி கேட்பவராகவும், நேர்மையானவராகவும் இருக்க வேண்டும்’ என்று கூறிய ஓவியா, என்னை பொருத்தவரையில் நீ அவ்வாறு இருக்கிறாய் என்று ஆரவ்வை பார்த்து என்று கூறினார்.
மேலும் ஆண்மகனுக்கு ஆரவ் ஒரு புதுவிளக்கத்தை கூறினார். அது, ‘ஆண் என்பவன் இயற்கையிலேயே பெண்ணை விட பலமானவனாக இறைவனால் படைக்கப்பட்டுள்ளான். பெண் மென்மையானவளாக படைக்கப்பட்டுள்ளார். ஆண் தனது பலத்தின் மூலம் கடுமையாக உழைத்து பெண்ணை காப்பாற்ற வேண்டும் அதாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இதற்கு பொருள். ஆண் பலமாக இருப்பதால் பெண்ணை அடக்கியாள வேண்டும் என்று ஒருசிலர் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றனர்’ என்ற விளக்கத்தை கொடுத்தார்.
இதை விளக்கத்தை கேட்ட ஓவியா, நீ தான் என் குரு’ என்று கூறி சிரித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.