shadow

ஓவியா: கல்லிடம் கூட சாரி கேட்கும் குழந்தை மனசு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு பெருகி கொண்டே போகிறது. குறிப்பாக ஓவியாவுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தங்களுக்கு ஏற்படும் பிரச்சனையாக நெட்டிசன்கள் கருதி கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின்போது ஓவியா வெட்ட வெளியில் நடனமாடி கொண்டிருந்தார். யாரும் அவரோடு ஒட்டாததால் அவர் மட்டும் தனியாக நடனமாடி கொண்டிருக்கும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கல்லில் ஓவியாவின் கால் பட்டுவிட்டது. உடனே கல்லிடம் சாரி என்று மன்னிப்பு கேட்டார்.

கல் இடித்ததால் ஓவியாவின் காலில் தான் வலி ஏற்பட்டிருக்கும். கல் உயிரற்ற பொருள் என்பதால் அதற்கு எந்த உணர்வும் இருந்திருக்காது. இருப்பினும் கல்லிடம் சாரி கேட்ட குழந்தை மனசு ஓவியாவிற்கு இருப்பதாக நெட்டிசன்கள் டுவிட்டரில் புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply