காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணைகள் கட்டுவது உள்பட எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், ”கர்நாடக அரசின் சிவசமுத்திரம், மேகதாது நீர்மின் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசு மேகதாதுவில் இரு அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மீறுவதாகும். மேலும், தமிழக அரசை ஆலோசிக்காமல், காவிரி ஆற்றில் எந்த திட்டங்களையும் மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது. இதுகுறித்து நீர்வளத்துறையை தாங்கள் அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.