shadow

போயஸ் தோட்டத்திற்கு திடீர் விசிட் செய்த முதல்வர் ஓ.பி.எஸ்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாரத பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துவிட்டு திரும்பிய பின்னர் போயஸ் தோட்டம் பக்கம் போகாமல் இருந்த நிலையில் நேற்று திடீரென போயஸ் தோட்டம் சென்றார்.

வரும் 29ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதுகுறித்து ஆலோசனை செய்வத்ற்காகவே அவர் போயஸ் தோட்டம் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போயஸ் தோட்டத்தின் இல்லத்தில் நேற்று மாலை சிபிஐ அதிகாரிகள் இருவர் சென்று இரண்டு அறைகளுக்கு சீல் வைத்ததாகவும், அந்த அறையில் இருந்து முக்கிய தஸ்தாவேஜ்களை அவர்கள் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவை போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றவும், அவர் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள கூடாது என்பதற்காக பயமுறுத்தவும்தான் இந்த நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Leave a Reply