தர்மம் மீண்டும் வெல்லும். கவர்னரை சந்தித்த பின் ஓபிஎஸ் பேட்டி
தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்று முன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அவருடன் பி.ஹெச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது ஆளுநர் வித்யாசாகர்ராவிடம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விளக்கியதாகவும், விரைவில் நல்லது நடக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.
மேலும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.