shadow

ஓபிஎஸ் பக்கம் சாயும் சசிகலா ஆதரவாளர்கள். சசியின் பஞ்சதந்திரம் பலிக்குமா?

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி மற்றும் முதல்வர் பதவியை பிடிக்க சசிகலா திரைமறைவு வேலைகளை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், மோடியின் முழு ஒத்துழைப்புடன் ஓபிஎஸ் தற்போது வெற்றிநடை போட்டு வருகிறார்.

ராம்மோகன் ராவின் ரெய்டுக்கு ஓபிஎஸ்தான் முழுகாரணம் என்றும் இதோடு நிற்காமல் சசிகலாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் விரைவில் ரெய்டு தொடரும் என்று கூறப்படுவதால் அதிமுகவின் பெரும்புள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சசிகலாவுக்கு ஜால்ரா அடித்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருகின்றார்களாம். இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு சொத்துக்களையும் பதவியையும் காப்பாற்ற இப்போதைக்கு ஓபிஎஸ் உடன் இருப்பதுதான் நல்ல முடிவு என்று பல அதிமுக பெரும்புள்ளிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலைஇல் சசிகலாவின் பஞ்சதந்திரங்களான திமுகவுடன் இணக்கமான உறவு,  மீடியாவை கைக்குள் போட்டுக்கொள்வது,  பாஜகவுக்கு தலையாட்டுதல், காங்கிரசுடன் ஒத்து போதல், முதல்வர் பதவிக்கு குறி, மக்கள் தலைவி ஆகுதல் ஆகியவற்றை பலிக்க வைக்க ஓபிஎஸ் தடையாக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply