ஓ.பன்னீர்செல்வம் – மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் திடீர் சந்திப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வரின் பொறுப்புகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்கனவே ஒரு முறை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்தார்.
இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது காவிரி விவகாரத்திற்காக திமுக நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய நகலை, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் ஸ்டாலின் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.