திருவாடனை தொகுதிக்கு சென்ற கருணாஸூக்கு கடும் எதிர்ப்பு
திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவும், சசிகலா ஆதரவாளருமான நடிகர் கருணாஸ், சமீபத்தில் தனக்கு ஓட்டு போட்டவர்கள் மட்டுமே தன்னை கேள்வி கேட்க உரிமை உள்ளவர்கள் என்றும், மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல அவசியம் இல்லை என்றும் பேட்டி அளித்திருந்தார். அவருடை பேட்டி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று கருணாஸ் தனது சொந்த தொகுதியான திருவாடனைக்கு சென்றார். அப்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பி.எஸ். ஆதரவாலர்கள், தீபா பேரவையினர், பசும்பொன் தேசிய கழகத்தை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர் மேலும் திருவாடானை தேவர் சிலைக்கு மாலை அணிவித்த கருணாஸ் எம்.எல்.ஏ. காரையும் முற்றுகையிட அவர்கள் முயன்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கருணாஸூக்கு எதிராக கோஷம் போட்டவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.