அங்காடி தெரு, அரவான் போன்ற படங்களை எடுத்த இயக்குனர் வசந்தபாலனின் அடுத்த படம் காவியத்தலைவன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமிபத்தில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், வசந்தபாலன், பாடலாசிரியர் பா.விஜய் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பா.விஜய், ‘நான் தினமும் இரவில் தூங்க செல்லும்போது என்னுடைய செல்போனை சைலண்ட்டில் வைத்துவிடுவேன். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணிபுரிந்தால் மட்டும் அவ்வாறு செய்யமாட்டேன். காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் எப்பொழுதுமே இரவில்தான் பாடல் ஒலிப்பதிவு செய்வார். எனது பாடலில் உள்ள சில வரிகளில் சந்தேகம் வந்தால் இரவு நேரத்தில் போன் செய்வார். அவருக்காகவே அவருடன் பணிபுரியும் சமயங்களில் நான் எனது மொபைல் போனை சைலண்டில் வைப்பதை தவிர்த்துவிடுவேன் என்று கூறினார். அவருக்காக நான் எனது தூக்கத்தை தியாகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் தான் பணிபுரியும் அனைத்து படங்களில் பாடல் ஒலிப்பதிவு, பின்னணி இசை முதலியவற்றை இரவில் அல்லது அதிகாலையில்தான் வைத்திருப்பார் என்பது அவருடன் பணிபுரியும் அனைவருக்கும் தெரிந்ததே…..
Leave a Reply
You must be logged in to post a comment.