அண்ணா பல்கலை தகவல்

பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் புதிதாக நிறுவனங்களில் பணிக்கு சேர வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு ஜூலை இறுதியில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது

பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

கலைக்கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வையும் ரத்து செய்ய யூஜிசி பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply