shadow

சீமான் மீது மேலும் ஒரு வழக்கு: தினமும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவு

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள மக்கள் போராட்டம் செய்து வருவது தெரிந்ததே. அந்த பகுதி மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை தூண்டிவிட்டு, அதிகாரிகளை மிரட்டியதாக சீமான் மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது ஓமலூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று சீமானுக்கு ஓமலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply