அமலாபாலை அடுத்து இன்னொரு பிரபல நடிகை விவாகரத்து
காவ்யா, மஞ்சு, லிசி, அமலாபால் மற்றும் திவ்யா உண்ணி என வரிசையாக மலையாள நடிகைகள் தங்கள் கணவர்களை விவாகரத்து செய்து வரும் நிலையில் தற்போது இன்னொரு பிரபல மலையாள நடிகையான சாந்திகிருஷ்ணாவும் கணவர் பஜோர் சதாசிவன் அவர்களை விவாகரத்து செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை சாந்திகிருஷ்ணா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்ததாகவும் இதன் காரணமாக அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகை சாந்திகிருஷ்ணா ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். மேலும் கடந்த 1994ஆம் ஆண்டு கேரள அரசின் சிறந்த நடிகை விருதையும் வென்றுள்ளார். தமிழில் பன்னீர்புஷ்பங்கள், மணல் கயிறு, நேருக்கு நேர் உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். ‘நேருக்கு நேர்’ படம் விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்த படம் என்பதும், சூர்யாவுக்கு இதுதான் முதல் படம் என்பதும் இந்த படத்தில் சாந்திகிருஷ்ணா, சூர்யாவின் சகோதரியாகவும் ரகுவரனின் மனைவியாகவும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.