shadow

chennai airportஇன்று சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது.

இன்று காலை துபாய் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில் இருந்து இறங்கிய பயணிகளான  முகமது யூசுப், முகமது மஜ்ஜித் ஆகிய இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

 எந்தவிதமுறையான ஆவணங்களும் இல்லாமல் துபாயில் இருந்து அவர்கள் தங்கத்தை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் இதுவரை 180 கிலோ தங்கம் பிடிப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply