ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்தவர் திடீர் மரணம்: பெரும் பரபரப்பு

பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் காளையர்கள் கூட மரணமடைவது அரிதாகவே இருக்கும். ஆனால் வேடிக்கை பார்த்தவர்கள் மரணமடைவது அவ்வப்போது நிகழ்ந்து அந்த நிகழ்ச்சியை சோகமாய் மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் பரிதாபமாக மாடு முட்டி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இன்று நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த செல்லப்பாண்டி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

அவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை இருப்பினும் அவர் போட்டியை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோதே திடீரென அவருக்கு படபடப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது

Leave a Reply