கொரோனா குறித்த ஒரு நல்ல செய்தியை கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்தார் என்ற நல்ல செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்டார்.

இதனையடுத்து அவர் இன்னும் ஒரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமாகியுள்ளது உண்மையில் பெரும் ஆச்சரியம் தான்

Leave a Reply