shadow

மீண்டும் கர்நாடக முதல்வராவேன்: சித்தராமையா பரபரப்பு பேச்சு

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி தொடங்கி ஒருசில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன் என முன்னாள் முதல்வர் சித்தராமையா கூட்டம் ஒன்றில் பேசியுள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா ஏற்கனவே காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று ஹசனில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘மக்களின் ஆசி கிடைத்தால் மீண்டும் கர்நாடக முதல்வராவேன். 2வது முறையாக முதல்வராவதை எதிர்க்கட்சிகள் கைகோர்த்து தடுத்துவிட்டதால் எதிர்பாராதவிதமாக என்னால் முதல்வராக முடியவில்லை, ஆனால் அதுவே இறுதியல்ல’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply