சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு: மீண்டும் உயிரிழப்பு
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா அதன் பின் அந்நாட்டை மட்டுமன்றி 190 நாடுகளுக்கும் பரவி ஆயிரக்கணக்கான உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் படிப்படியாக சீனாவில் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் வூகான் மாகாணத்தில் கூட கடைகள் போக்குவரத்து ஆகியவை தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் திடீரென நேற்று மீண்டும் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3 பேர் மரணம் அடைந்துவிட்டார்கள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் சீனாவில் கொரோனா தாக்குதல் தொடர்கிறது என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.