காந்திகிராம பல்கலையில் பி.எஸ்சி. வேளாண்மை வேளாண்மை பட்டயப்படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 22 ல் நடக்கிறது.
பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது:காந்திகிராம பல்கலையில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 11, 12 ல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. வெளிமாநில மாணவர்கள் பங்கேற்பதற்கு வசதியாக ஜூன் 18, 19 க்கு கவுன்சிலிங் மாற்றியமைக்கப்பட்டது.
ஜூன் 18 ல் பி.எஸ்சி., கணிதவியல் இயற்பியல் வேதியியல் மனையியல் ஆடை வடிவமைப்பியல் இளநிலை படிப்புகளுக்கு நடக்கும். ஜூன் 19 ல் பி.ஏ., -பி.காம்., -பி.பி.ஏ.-, எம்.ஏ., வளர்ச்சி நிர்வாகம் (5 ஆண்டுகள்) படிப்புகளுக்கு நடக்கும். பி.எஸ்சி., வேளாண்மை வேளாண்மை பட்டயப் படிப்புக்கு ஜூன் 22 ல் நடக்கிறது. மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர்.
மேலும் விபரங்களுக்கு www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.