கடல் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓகே கண்மணி’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு படத்திற்கு ‘யூஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கிய காதல் திரைப்படங்களான இதயத்தை திருடாதே, அலைபாயுதே போன்ற படங்களை போல இந்த படமும் ஒரு அழகிய காதலை சொல்லும்படம் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூஏ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளதால் மணிரத்னம் உள்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்சார் அதிகாரிகளின் முடிவு அதிருப்தி அளித்தால் மணிரத்னம் இந்த படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியிருந்தார். ஆனால் அங்கும் இந்த படத்திற்கு யூஏ சர்டிபிகேட்தான் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
திருமணத்திற்கு முந்தையை செக்ஸ் மற்றும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் பாணியில் உறவில் இருக்கும் கேரக்டர்கள் இருப்பதால் இந்த படத்திற்கு யூ’சர்டிபிகேட் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு எப்படியும் ‘யூ’ சர்டிபிகேட் பெற வேண்டும் என்று மணிரத்னம் எவ்வளவோ முயன்றும் அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
துல்கார் சல்மான், நித்யா மேனன், கனிகா, பிரகாஷ்ராஜ், ரம்யா சுப்பிரமணியன் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்தை மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.