‘ஒ அந்த நாட்கள்’. இந்த படத்தில் நடிக்கும் 4 முன்னணி நடிகைகள் யார் தெரியுமா?
கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் கோலிவுட்டில் கொடிகட்ட பறந்த நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி மற்றும் ராதிகா என்பது அனைவரும் தெரிந்ததே.
இந்நிலையில் இந்த நான்கு நடிகைகளும் ஒரு படத்தில் தற்போது இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு ‘ஒ அந்த நாட்கள்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் மற்றும் ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கிய ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்தை இயக்கி வருகிறார். மிராக்கிள் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜான்பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்திற்கு சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்து வருகிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.