shadow

upsc

தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானம், கப்பற்படைகளில் அதிகாரிகள் பணிக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்வை நடத்துகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு அகாடமியில் 135வது கோர்ஸ் மற்றும் கப்பற்படை அகாடமியில் 97வது 10 + 2 கோர்ஸ் பயிற்சிகள் 02.01.2016ல் ஆரம்பமாக உள்ளது.

மொத்த காலியிடங்கள்: 375

இதில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் 320 இடங்களும் (ராணுவம் – 208, கப்பற்படை – 42, விமானப்படை – 70). இந்திய நேவல் அகாடமி (பிளஸ் 2 என்ட்ரி ஸ்கீம்) – 55.

வயது வரம்பு: 02.07.1996க்கு முன்போ அல்லது 01.07.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது.

கல்வித்தகுதி:

1. தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10+2 (Cadet Entry Scheme) பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள்

இயற்பியல், கணிதம் பாடப்பிரிவுகளில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு கட்டணம்: ரூ.100. (எஸ்சி., எஸ்டியினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது). இதை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் பைகானிர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாஙக் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளின் ஏதாவதொரு கிளையில் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

தேர்வு: இரண்டு கட்டங்களாக 3 – 4 நாட்கள் தேர்வுகள் நடைபெறும்.

தேர்வு மையம்: சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், மதுரை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: //www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2015.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  //www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply