shadow

கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.

அதேபோல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகளில் உள்ள ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகியவை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்றும் மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு பின்னர் தமிழக அரசு வெளியிடும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.