பெரும் பரபரப்பு

ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் உள்ளாடை மட்டுமே அணிந்து நர்ஸ் பணியாற்றிய ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் உள்ளாடை மட்டுமே அணிந்து அதன்மேல் கொரனோ தடுப்புக்கான பி.பி.ஈ என்னும் டிரான்ஸ்பரன்ட் உடையை நர்ஸ் ஒருவர் அணிந்திருந்தார்.

இதனால் அந்த வார்டில் இருந்த பல நோயாளிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து யாரும் புகார் செய்யவில்லை என்றாலும் அந்த நர்ஸ் மருத்துவமனை விதிமுறைகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது

தனது செயலுக்கு விளக்கம் அளித்த நர்ஸ், வெப்பம் அதிகமாக இருந்ததால் தன்னால் நர்ஸ் ஆடையை அணிந்து அதற்கு மேல் பிபிஈ உடையையும் அணிய முடியவில்லை என்றும் அதனால்தான் உள்ளாடை மட்டும் அணிந்ததாகவும் விளக்கம் அளித்து இருந்தார். அவருடைய விளக்கத்திற்கு சமூக வலைதள பயனாளர்கள் பாராட்டு தெரிவித்தாலும் மருத்துவமனை நிர்வாகம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply