shadow

anjali trivediபாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அஞ்சலி திரிவேதி. இவர் நேற்று மும்பை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தன்னுடைய படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக இணையதளத்தில் பதிவு செய்த குற்றவாளியை கண்டுபிடிக்கும்படி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்தி, தெலுங்கு போன்ற படங்களில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி திரிவேதி. இவர் திரைப்படங்களில் நடித்த காட்சிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக இணையத்தில் சில விஷமிகள் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ளனர். அஞ்சலியின் நண்பர்கள் அந்த படங்களை பார்த்து அதிர்ந்து அவரிடம் தகவல் கூற, அஞ்சலி திரிவேதி அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார்.

பின்னர் மும்பை போலீஸில் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து மும்பை காவல்துறையினர் தரப்பில் கூறும்போது, ‘அஞ்சலி திவேதி கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இணைய தள பகுதியை தடை செய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதை வெளியிட்டவரை கண்டுபிடிப்பதற்காக சைபர் கிரைம் போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது. அஞ்சலி திரிவேதி புகார் கொடுத்த ஒருமணி நேரத்தில் ஆபாச படங்களை வெளியிட்ட இணையதளம் தடை செய்யப்பட்டது என்று கூறினார்.

மேலும் ஒருசில தெலுங்கு செய்தி இணையதளங்கள் அஞ்சலி திரிவேதியின் ஆபாச படம் என்பதற்கு பதிலாக அஞ்சலியின் ஆபாசப்படம் இணையத்தில் வெளியானதான தவறாக செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் தமிழ் நடிகை அஞ்சலியின் படம் என தவறாக பலர் நினைத்துக்கொண்டதால் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த இணையதளங்கள் தங்கள் தவறை திருத்தி, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளன.

Leave a Reply