நிர்வாண மனிதன் நடத்திய பயங்கர துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவில் உள்ள டென்னெஸ்ஸீ என்ற மாகாணத்தில் நாஷ்வில்லே நகரின் அருகே நேற்று நிர்வாணமாக வந்த மர்ம மனிதன் ஒருவன் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று வார இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் டென்னெஸ்ஸீ மாகாணத்தில் உள்ள பிரபல ரெஸ்டாரெண்டில் உணவுகளை சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த ரெஸ்டாரெண்டுக்குள் திடீரென நுழைந்த நிர்வாண மனிதன் தனது கையில் உள்ள துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்
பின்னர் அங்கிருந்த கார் ஒன்றில் ஏறி அந்த நிர்வாண மனிதன் தப்பிவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியானதாகவும், 4 பேர் காயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.