shadow

11TY_PASSPORT_1751906fவரும் ஜூலை மாதம் முதல் சென்னைவாசிகள் இனி தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த வசதி சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 25 தபால் நிலையங்களில் இந்த  வசதி கொண்டு வரப்படுகின்றது. சென்னையில் மட்டும் 10 தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டுக்களை விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தபால்நிலைய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டி வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிலிருக்கும் தகவல்களை ஊழியர் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்வார். விண்ணப்பதாரர்கள், தங்கள் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம். தபால் ஊழியர்களுக்கு, விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டுக்கள் விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த பணிகளுக்காக தபால் நிலைய ஊழியர்களுக்கு தனி கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த புதிய வசதியால் சென்னை மக்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply