shadow

அசல் ஓட்டுனர் உரிமம்: தமிழக அரசின் புதிய அறிவிப்பு

வாகனங்கள் ஓட்டுபவர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் இன்று முதல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற இதுகுறித்த வழக்கு ஒன்றில் ‘அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மேலும் இந்த வழக்கு செப்டம்பர் 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் நீதிமன்றம் கூறிய கருத்தை அடுத்து செப்டம்பர் 4ஆம் தேதி வரை வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செப்டம்பர்ம் 4ஆம் தேதி இந்த வழக்கிற்கு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்து தான் அசல் ஓட்டுனர் உரிமம் அவசியமா? என்பது குறித்து இறுதி முடிவு தெரியும்

Leave a Reply