ஐதராபாத் நகரில் ஹட் ஹட் புயல் நிவாரண நிதிக்காக இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு பேசிய ஒருசில கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழில் வெளியான விஜய் நடித்த ‘கத்தி’ படம் மிகச்சிறந்த படமாக இருந்தது என்று கூறிய மகேஷ்பாபு, இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தன்னை நடிக்குமாறு ஒருசில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அணுகினார்கள் என்றும், ஆனால் தான் இந்த ரீமேக் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
பொதுவாக எந்த ரீமேக் படத்திலும் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் இதில் விஜய் படமும் அடங்கும் என்றும் அவர் கூறினார். மகேஷ்பாபு நடித்த கில்லி உள்பட பல திரைப்படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் நடித்த ஒரு படத்தின் ரீமேக்கில் நடிக்க முடியாது என மகேஷ்பாபு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.