டிராபிக் இல்லாத நேரத்தில் தானாக டிம் ஆகும் தெருவிளக்குகள்
நார்வே நாட்டில் ஒதுக்குப்புறத்தில் உள்ள பகுதிகளில் டிராபிக் இல்லாத நேரத்தில் தானாகவே டிம் ஆகும் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் பெருமளவில் சேமிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நார்வே நாட்டின் உள்ள பெருநகரங்களின் புறநகர் பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த சாலைகளில் ஒருசில மணி நேரங்களில் வாகனங்களே போகாமல் காலியாக இருக்கும்.
இந்த நிலையில் இதனை கணக்கில் கொண்டு தானாகவே டிராபிக் இல்லாத நேரங்களில் தானாகவே டிம் ஆகும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் 20% வரை மின்சாரம் சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.