shadow

உலகின் முதல் கப்பல் சுரங்க பாதை. நார்வே நாடு முயற்சி

பேருந்துகள், ரயில்கள் மட்டுமே இதுவரை சுரங்க பாதைக்குள் செல்வதை பார்த்திருப்போம். ஆனால் முதல்முறையாக சுரங்கப்பாதைக்குள் கப்பல் செல்கிறது. இந்த முதல் கப்பல் சுரங்க பாதை நார்வே நாட்டில் உள்ள லேர்டல் என்ற பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

சூரியன் மறையாத நாடு என்ற புகழை பெற்ற நார்வே நாட்டில் கப்பல்களின் பயண நேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கப்பல் சுரங்கத்தை உருவாக்க அந்நாட்டு கடல் போக்குவரத்துத்துறை திட்டமிட்டது

இதன்படி கடும்பாறைகளாலான இந்த தீபகற்பத்துக்கு உள்ளே அடியாழத்தில் “உலகின் முதல் கப்பல் சுரங்கம்” உருவாக்கப்பட இருக்கிறது. ஆழ்கடலிலிருந்து விலகி, இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் இந்த சுரங்கம் அமைக்கப்படுகிறது. 118 அடி அகலம் மற்றும் 162 அடி உயரம், 5,610 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த கப்பல் சுரங்கம் வழியாக, 20,000 டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.

உலக அளவில் கப்பல்கள் செல்ல கடலுக்கடியில் கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக்கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை. இந்த சுரங்கம் அமைப்பதற்காக சுமார் 80 லட்சம் டன் கற்பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Leave a Reply