10, 12ஆம் வகுப்புகள் பொதுத்தேர்வின் புதிய அட்டவணை
வடகிழக்கு டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தினால் ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கும் அதிகமான உயிர்கள் பலியாகின என்பது தெரிந்ததே. இந்த சம்பவத்தால் இன்னும் வடகிழக்கு டெல்லியில் இயல்பு நிலை திரும்பவில்லை என்றாலும் தற்போது ஓரளவு நிலைமை சரியாகியுள்ளது.
எனவே அந்த பகுதியில் நடைபெற வேண்டிய 10, 12ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது சி.பி.எஸ்.இ நிர்வாகம் புதிய தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது
இதன்படி சி.பி.எஸ்.இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளதாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21ஆம் தேதி சி.பி.எஸ்.இ தேர்வுகள் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.