பரபரப்பு தகவல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த 6 நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர் என்பதும் கடந்த இரண்டு நாட்களாக 1400 க்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடசென்னையில்தான் அதிக பாதிப்பு உள்ளதால் அந்த பகுதியில் உள்ள ஒரு சில இடங்களை முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை தடுப்பதில் ஒரு நடவடிக்கையாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

குறிப்பாக ராயபுரம் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அரசு உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply