நாளை வலிமை அப்டேட் உண்டா? அஜித் எடுத்த அதிரடி முடிவு
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை அஜித் பிறந்த நாளில் ‘வலிமை’ அப்டேட் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து தயாரிப்பு தரப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்.
இந்த அறிக்கையால் அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தாலும் நாளை அஜித்தின் பிறந்த நாளை சமூக வலைத்தளங்களில் வெறித்தனமாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.