ஏப்ரல் 14 வரை ரயில் போக்குவரத்து இல்லை: இரயில்வே துறை அறிவிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தபட்டிருப்பதாக அறிவித்தார்

இந்த நிலையில் மார்ச் 31 வரை ரயில்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ரயில்வே துறை அறிவித்துள்ளது

இதனால் ஏப்ரல் 14ஆம் தேதி வரை எந்த ஒரு பயணிகள் ரயிலும் நாடு முழுவதும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முக்கிய சரக்கு ரயில்கள் மட்டும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply