பாடல்கள் இல்லாத படத்தில் அரவிந்தசாமி
‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகியுள்ள நடிகர் அரவிந்தசாமி தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து பிசியான நடிகராக உள்ளார்.
இந்த நிலையில் ‘துருவங்கள் 16’ இயக்குனரின் அடுத்த படமான ‘நரகாசுரன்’ என்ற படத்தில் அரவிந்தசாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். த்ரில் மற்றும் ஆக்சன் படமான இந்த படத்தில் பாடல்களே இல்லை என்பது கூடுதல் சிறப்பு,. இதற்கு முன்னர் ‘அந்த நாள், குருதிப்புனல் உள்பட பல படங்கள் தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ரான் எதான் யோஹன் என்பவர் இசையமைக்கின்றார். இந்த படத்தில் சந்தீப் கிஷான், ஸ்ரேயா, இந்திரஜித் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.