ஒரு வாரம் கறி திங்காம இருக்க முடியாதா? நெட்டிசன்கள் புலம்பல்

தமிழகத்தில் திறந்திருக்கும் இறைச்சி கடைகளில் மிக நீண்ட வரிசை இருப்பதாகவும், ஊரடங்கை பற்றி கவலைப்படாமல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இறைச்சி கடைகளில் தனிநபர்களுக்கான இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க போலீசார் அறிவுறுத்தியும் பல கடைகளில் இறைச்சி வாங்க கூட்டம் அதிகரித்துள்ளதால் நெட்டிசன்கள் டென்சனுடன் சில கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொத்து கொத்தாக கொரோனா வைரஸால் பலியாகி வரும் நிலையில் ஒரு வாரம் உங்களால் கறி திங்காமல் இருக்க முடியாதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ. 800 முதல் ரூ1,000க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply