shadow

சசிகலா நீக்கப்படும் வரை இணைப்பு சாத்தியம் இல்லை. கேபி முனுசாமி

அதிமுகவின் இரு அணிகள் இணைவதற்கு முட்டுக்கட்டையாக கேபி முனுசாமி உள்பட ஒருசிலர் மட்டுமே காரணமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து கேபி முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக அணிகள் இணைப்புக்கு தான் எந்தவிதத்திலும் இடைஞ்சலாக இல்லை என்று கூறிய முனுசாமி, சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படும் வரை இணணப்புக்கான சாத்தியக்கூறுகளை தன்னால் உறுதியாக கூறமுடியாது என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் ஓ.பி.எஸ்., எடுக்கும் இறுதி முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம் என்று கூறிய கேபி முனுசாமி தர்மயுத்தத்தின் மூலக்கருவே சசிகலா குடும்பத்தை முழுமையாக வெளியேற்றுவது தான். அவர்களை வெளியேற்றாத வரை அணிகள் இணைய சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply