தேர்தலில் போட்டியில்லை: கமல்ஹாசனின் அதிரடி முடிவுவுக்கு ரஜினி காரணமா?

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று கமலஹாசன் சற்று முன்னர் அறிவித்துள்ளார். அவருடைய இந்த முடிவிற்கு ரஜினிகாந்த் தான் காரணம் என்று கூறப்படுகிறது

கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனும் இணைந்து அரசியலில் செயல்படுவார்கள் என்றும், இருவரும் இணைந்தே வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது

ஆனால் ஒரு சிலர் கமல் ரஜினி ஆகிய இருவரும் வெவ்வேறு துருவங்கள் என்றும் அதனால் இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் கூறினர்

இந்த நிலையில் இன்று மதியம் ரஜினி-மக்கள்-மன்றம் விடுத்த அறிக்கை ஒன்றில் உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெளிவுபட கூறியிருந்தது

இதனை அடுத்தே நேற்று வரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறி வந்த மக்கள் நீதி மய்யம் திடீரென இன்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்து உள்ளது

இது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை/ இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்தப் பாத்திரமும் வேண்டாம்/ 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply