பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து இயக்கும் டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஆடியோ விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘நான் சினிமாவில் நுழைவதற்காக பல இரவுகள் தூங்காமல் கஷ்டப்பட்டேன். அதன்பின்னர் ஒருவழியாக சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்ற பின்னர் ஒரு கட்டத்தில் தொடர்ந்து படங்களை இயக்குவதா? அல்லது தயாரிப்புடன் மட்டும் நிறுத்திக்கொள்ளலாமா? என்று முடிவை எடுக்க வேண்டிய நிலை வந்தது.
அந்த நேரத்தில்தான் என்னுடைய மகன் விஜய் நடிகராக உருவெடுத்தார். பல முன்னணி இயக்குனர்களிடம் விஜய்யை அவர்களுடைய படத்தின் மெயின் ரோலில் நடிக்க வைக்க நான் வேண்டுகோள் விடுத்தேன். அந்த படத்தை நானே தயாரிப்பதாகவும், தாராளமான சம்பளம் இயக்குனருக்கு தருவதாகவும் கூறினேன். ஆனால் அந்த முன்னணி இயக்குனர்கள் என் மகன் விஜய்யை வைத்து படமெடுக்க மறுத்துவிட்டனர். அதன்பின்னர்தான் மகனுக்காக இயக்குனராக தொடர முடிவெடுத்து விஜய்யை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கினேன்.
இன்று விஜய்யின் வளர்ச்சியை பார்த்து அன்று இயக்க மறுத்த இயக்குனர்கள் எல்லோரும் வருத்தப்படுவார்கள் என்பதை உணர்கிறேன். தற்போது எனக்கு பாசமான மகன், மருமகன் பேரக்குழந்தைகள் என இருப்பதால் டூரிங் டாக்கீஸ் என்ற இந்த படத்துடன் என்னுடைய இயக்குனர் பணியை முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். ஆனால் தொடர்ந்து நல்ல கதையம்சத்துடன் இளைதலைமுறை இயக்குனர்கள் என்னை அணுகினால் அவர்கள் படத்தை தயாரிக்க தயாராக உள்ளேன்.\
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1JE37nd” standard=”//www.youtube.com/v/HAa2P5hOQAc?fs=1″ vars=”ytid=HAa2P5hOQAc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2613″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.